நின்னவள் தோழமை
அழகின் ஐஸ்வரியங்களை கோர்த்து பின்னி உருகொண்ட நங்கையவள்
தன் கண்ணாடி முன்னின்று
தன்னை தானே இரசித்துக் கொண்டிருந்தாள்!!
தன் கண்களுக்குக் மட்டும் தான்
அவள் அழகு புலப்படுவதாக மாயையில் ஆழ்ந்திருந்தாள்!!
அதனால்தான் ஏனோ
தனை தனிமைபடுத்தி
அழகை அழகாக காட்டும்
தன் நிலைகண்ணாடிகளை
தன் உற்ற தோழமைகளாக ஏற்றிருந்தாள்!!
ஒன்றை மட்டும் அவள் இன்றும் அறிய முற்படவில்லை!!
அந்த நிலைகண்ணாடிகளை தாண்டிய
தோழமை
என் கண்களுக்கும் அவளுக்கும் உள்ளதென்று!!
@perawritings
No comments:
Post a Comment