My Blog List

Monday, October 26, 2020

"செந்தமிழே" வழங்கும்..

ஈழத் திருநாட்டின் சாபக்கேடு!!

 தாய்ப்பால் வற்றித் தீர

அழும் பிள்ளைக்காய்

மார்பை பிசைந்து - தன்

குருதியை கொடுக்கும்

தாய்மார்கள்!! 


கம்பி முட்களின் எண்ணிக்கை வரை

இலக்கங்களை 

எண்ணப் பழகிக் கொண்ட 

பிஞ்சுக் குழந்தைகள்!! 


கால் இழந்து

கை இழந்து

உடமைகளும் சேர்த்திழந்து

சொந்த நாட்டிலே

அகதி நாமம் பூண்ட

எம் இன மக்கள்!! 


இக் கலியுகத்தின்

சாபக்கேடு!!


@perawritings

No comments:

Post a Comment

Popular post