கர்வம்_ஒழிந்ததடி
மாலை மயங்கிக் கொண்டிருக்கும்
அந்த அத்திப் பொழுது!!
மரத்தின் நிழலில் தலை சாய்த்தே
நின்னவள் வருகைக்காய்
விழிகளும் வழி பார்த்தே
தவம் கிடந்தன!!
தென்றலின் தேடலில்
அகப்பட்ட உதிர் இலைகள்
மெது மெதுவாக எனை வருடவே அவற்றை எண்ணிய படி
பொழுது புலர்ந்தது!!
தூரத்தே ஓர் சலசலப்பு!!
முக வியர்வை கண்ணோரமாய்
கன்னம் வருட - உடுத்திருக்கும்
உடைதனிலே அவை மோட்சம் பெறவே
மின்னல் நடையில்
சற்றே பதற்றத்துடன்
தேவதையவள் விம்பம்!!
ஏக்க மிகுதியில் கண்கள் கலங்கி
நெற்றிப் பொட்டு சற்றே தளர்ந்திருக்க
பெண்ணழகின் மொத்தமுமாய்
என் தமிழிச்சி விழி சிமிட்டி
எனை அடைந்தாள்!!
இதழ் புரியாத புன்னகையும்
விழி புரிந்ததால் ஏனோ நானும்
எனை இழந்தேன் அன்றோ!!
கட்டியணைக்க கைகளும்
கன்னம் வருட இதழும்
மனதின் அனுமதிக்காய்
காத்துக் கிடந்தன அடிமை போல்!!
காத்திருந்து சுவை கொண்ட மனமோ
ஈகோவில் முகம் சுழித்து
அவள் முன்
நாடகம் நடத்தியதே!!
நின்னவளும் கலங்கித்தான்
எனைப் பார்த்தாள்!!
அவள் மொழிகள் தடுமாற தொடங்கின!!
ஏக்க மிகுதியில் புலம்பினாள்!!
என் காதுகளோ தன் புலன் மறந்து
கண்களுக்கு உயிர் கொடுத்தன!!
அவள் இதழ் அசைவை சிறை பிடித்தன!!
மொழி கேளாமலே உன் இதழுக்கு
அடிமையாகினேன் சகி!!
"உயிர் பறித்தே என்னை
உன் உதட்டின் ஓரம் புதைத்து விடு"
மனதும் ஏங்கியது!!
எல்லா வேசமும் கலைந்துபோய்
புலம்பிய அவள் இதழோரம்
இதழ் பதித்தேன்!!
மௌனங்கள் மொழிகள் ஆக
தனை மறந்தே அவள் என்னுள்
உறைந்தாள்!!
மறுபடியும் உன் தாமதம்
எதிர் பார்தே காத்திருக்கும் என் மனது!!
உன் இதழசைவில் என் உசிரலைய கர்வம் ஒழிந்ததடி!!!
@perawritings
No comments:
Post a Comment