My Blog List

Tuesday, October 27, 2020

செந்தமிழே

அம்மா - கவிதை வரிகள் 

தொப்புள்_கொடி_சொந்தம் 

கருவினில் உயிராகி

ஈரைந்து திங்கள் 

பத்திரமாய் எனை சுமந்து

கனவுகள் பல கண்டு

இமையாத விழிகளுடன்

வலிகளையும் துச்சமென

எதிர் கொள்ள காத்திருந்து 

மரணம் கடந்து

ஜனனம் வென்ற

தாயே!! 


பிஞ்சு விரல் நெஞ்சில் தாங்கி

கைக்குள்ளே எனைக் காத்து

நிலாச் சோற்றில்

பசியாற்றி...

ஊரெல்லாம் துயிலில்

ஒய்யாரமாய் திழைத்திருக்க

இரு விழி இமை மூட அழைத்திருக்கும்

கணம் தனிலும்

எனக்காக விழித்திருக்கும் என் அம்மா!!

நான் வீழ்ந்தால்

தான் துடிக்கும் என் சொந்தம்!! 


சினம் கொண்டு திட்டி

நல் வழியும் காட்டிவிட்டு;

அழும் என்னை

மறுகணமே மடிதந்து

தலை கோதி

அணைத்தெடுக்கும் 

எனக்கான உயிர் ஒன்று!! 


ஏழேழு ஜென்மமதிலும்

நீயே தாயாய் வேண்டும்!!

இறுதி ஜென்மத்தில்

நான் உன் தாயாக வேண்டும்!!

சேவைகள் புரிந்திட !!

கொஞ்சம் சுயநலம் தான் அம்மா!

உன்னைவிட யார் உள்ளார்

வையத்தில் எனை காக்க!! 


தாலாட்டின் சுவை கண்டே

வளர்ந்தவன் அன்றோ!!

இன்றும் எதிர்பார்புக்களே மீதி!!

எக்கணம் என் கடன் தீர்பேன்....... 


நாளொன்று தந்து 

உன் தினமாய் கொண்டால் 

தாழ் செயலாய் நினைகின்றேன் தாயே!!

வாழும் நாட்கள் யாவுமே 

அன்னை உந்தன் நாட்களே!! 


அம்மா;

உனக்கு நிகர் நீயே!!

அந்த கடவுளும் உன் காலடியின் கீழே!! 

@ perawritings 



No comments:

Post a Comment

Popular post