My Blog List

Saturday, October 24, 2020

அப்பா - கவிதை

 "செந்தமிழே" - கவிதைத் தொகுப்பு

அப்பா

தோள்களில் தனையனைத் தாங்கி

தான் பார்த்த உலகை விட

பரந்த உலகினை 

தன் மகன் பார்த்திட

ஆசை கொள்பவன் தந்தை!! 


தன் குருதியை உரமாக்கி

கால்களில் சக்கரங்களைக் கட்டி

மணிகணக்கில் வேலைசெய்து

சேகரித்த செல்வம் எல்லாம்

தனையனவன் உயர்விற்காய்

புன்னகையுடன் 

ஈய்ந்தளிப்பவன் தந்தை!! 


அவன்

ஒரு போதும்

வாரியணைத்து

தன் நெஞ்சினை பிழந்து 

அன்பினை காட்டுவதில்லை!! 


எதிரியாய் வேடம் பூண்டு

கை பிடித்து நடை பழக்கி

தான் இன்றிய வேளைதனில்

தன் தனையனுக்கு

எதிர்வரும் தடைகளை

உதிரிகள் ஆக்க 

ஆவன செய்பவன் - தந்தை!! 


மகனாய் உனக்குத் தொண்டாற்ற

இந்த தனையனுக்கு

ஓர் பிறவி போதாது - அப்பா!!

#father's love🖤



@perawritings

2 comments:

Popular post